என்னைப் பற்றி

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, August 12, 2008

பணவீக்கம்

அன்புள்ள நண்பர்களே,
பணவீக்கம் என்றால் என்ன? பணம் எப்படி வீங்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப் பட்ட போதுதான், இத்தனைத் தகவல்களும் எனக்குத் தெரியவந்தது. இப்பொழுது அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

பணவீக்கம்:
பணம் வீங்குவதற்கான வாய்ப்பில்லை, ஆக பணவீக்கமென்பது எதை வைத்துக் கூறப்படுகிறது. அதாவது இப்படிச் சொன்னால் எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடும். விலை வீக்கம் அல்லது பண மதிப்பின்மை பெருக்கம் என்றும் கூறலாம். அதாவது ஆங்கிலத்தில் "Too munch of money, chasing too few goods" என்று இதைச் சொல்லுவார்கள். இது எப்படி ஒரு நாட்டில் உருவாகிறது என்பதை நாம் அறியவேண்டும். இதோ சில...

* பொருளின் பற்றாக்குறையும், தேவையின் அதிகரிப்பும்: ஒரு இடத்தில் 1000 பேருக்குத் தேவையான பொருளை 1500 பேர் வாங்க எண்ணுகிறார்களெனில், அந்தப் பொருளின் விலை அதிகரிக்கிறது. எந்த விதத்திலும் ஒருவரின் சம்பளமோ, அல்லது பொருளின் தரமோ அல்லது உண்மை விலையோ மாறாமல் இருக்கும்பொழுதும், அந்தப் பொருளின் விலை உயர்வதால் பணவீக்கம் ஏற்படுகிறது. இது கீழ்கண்ட சில காரணங்களாலும் அமையலாம்.
+ ஒரு ஊரில் மென்பொருள் நிறுவனங்கள் குவியத் தொடங்கிவிட்டால், அங்கே திடீரென்று வேலைக்கு பல மாநிலங்களிலிருந்து வந்து குவியும் மக்களின் தேவைக்கேற்ற பொருட்கள் அந்த ஊரில் கிடைத்து விடாது. அதே நேரத்தில் அவர்கள் இதற்கு முன்னால் இருந்த ஊரிலிருந்து அந்தப் பொருட்களும் வந்துவிடாது. ஆக இந்த திடீர் மாற்றத்தால், அந்த ஊரில் பொருட்களின் தேவை மிக அதிகமாகிறது, விலை ஏறுகிறது.

+ சில பொருட்களுக்கு அரிசி போன்ற பொருட்களுக்கு அரசாங்கமே விலை நிர்ணயிக்கிறது, ஆனால் அது எல்லப் பொருளுக்கும் அப்படி நடப்பதில்லை, ஆக அன்றையத் தேவைக்கும், அன்றைய சந்தையில் வந்திறங்கிய பொருட்களின் அளவைப் பொருத்தே விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. இதனாலும் பொருட்களின் விலை உயருகிறது.


* கற்பனை அல்லது வதந்தி: சில பொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடுமென்ற எண்ணத்தினாலும், அல்லது கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தினாலும் அதிகமாக வாங்கப் படுவதால், விலை அதிகரிப்பு. உதாரணத்திற்கு முழு அடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவைகளால் பலசரக்கு, எரிபொருள் போன்றவையின் விலை உயர்த்தப் படுகிறது.

* அரசாங்க மானியங்கள்: ஒரு அரசு பல நேரங்களில் விவசாயக் கடன் போன்றவைகளை ஓட்டு வங்கிக்காக ரத்து செய்யும், இது போன்ற சமயங்களில் அந்த பணம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிப்பணத்தாலும், நுகர்வோர் அன்றாட செலவாகிய எரிபொருள் முதல் எள் வரை எல்லாவற்றிலும் சரமாரியாக ஏற்றப்படும்.

முதலில் ஒரு நாட்டின் பணப்புழக்கம் பற்றி அறிவோம். ஒரு நாட்டு மக்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? மூலத்தை ஆராய வேண்டும் இதற்கு. முதலில் ஒரு நாடு தன்னிடம் உள்ள தங்கத்தை வைத்து அதன் மதிப்பிற்கேற்ப பணத்தை அச்சடித்துக் கொள்கிறது. தங்கமில்லாத நாடுகள், அதனுடைய பொருள் வளங்களை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து தங்கம் வாங்கி, மீண்டும் அந்தத் தங்கத்தை வைத்து தனது பணத்தை அச்சடித்துக் கொள்ளும். இவ்வாறுதான் அரசுக்கு பணம் கிடைக்கிறது.

இப்பொழுது இந்தப் பணத்தை எப்படி மக்களிடம் சேர்ப்பது? இது மிகக் கடினமான மற்றும் சிரத்தையான வேலை. மக்கள் கைக்கு பணத்தை, வேலை மூலம் மட்டுமே கொடுக்க முடியும். அதாவது வங்கிக் கடன் வழங்கி, பின்னர் வாங்கியவர்கள் வேலை செய்து அதை அடைப்பது, அரசாங்க வேலைக்கு வேலைக்குச் சேரும் மக்கள் கையில் கிடைக்கும் பணமும் புழக்கத்திற்கு வரும். அதே சமயம் விவசாயம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே முதலில் நடந்து வந்ததால், பலசரக்கு பொருட்கள் விற்பனைக்கு வந்துவிடும், அதை பணம் கொடுத்துப் பெருவதால், பணம் மக்களிடம் புழக்கத்திற்கு வருகிறது.

நாட்டின் பண மதிப்பு எப்படி மாறுகிறது? இதற்கான கேள்விக்கான விடை இரண்டு பாகமாகிறது. ஒன்று கருப்புப் பணமாக ஒதுக்கி வைக்கப் படும் பணம் கணக்கில் வராமல் போகிறது, அது தவறான வழிகளிலேயே புழங்கப் படுகிறது, மேலும் அந்நியச் செலாவனி மூலம். அதாவது வெளிநாட்டுப் பணம் சில பல காரணங்களாக இறக்குமதியாகுவது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் ஓர் அரசு எவ்வளவு பணத்தை அச்சிட வேண்டும் என்றும், பணப்புழக்கத்தை கட்டுப் படுத்துவதற்காக வட்டியை அதிகப்படுத்துவதும் நடக்கிறது (வீட்டு வட்டிக் கடன் ஏறி இறங்குவதற்கான காரணம் இதுதான்!)

இதைச் சரி செய்வதெப்படி? என்ற கேள்வி உடனே எல்லோருக்கும் எழும். இதை தனி மனித ஒழுக்கம் மூலமாகவும், அரசாங்கத்தின் மூலமும் சரி செய்ய முடியும்.

அதாவது முதலில் சரியான குடும்பமுறை அமைப்பும், கலாசாரமும் இது போன்ற விசயங்களை தடுக்கிறது. அது எப்படி இவையிரண்டும் இதைத் தடுக்குமென்பது முரணாகத் தோன்றுவது போலத்தான் இருக்கும். ஆனால் ஆணி வேர் இதுதான். ஒரு குடும்பத்திற்கான பணத்தேவை வருமானத்தை விட அதிகரிக்கும்போதுதான் அந்தக் குடும்பத்திற்கு கடன் மூலமாகவோ, அல்லது வேறு வழியிலோ பணம் தேவைப் படுகிறது. மேலும் பொருட்களை அளவான முறையில் சரியாகப் பயன்படுத்துவது, இதனால் பொருட்களின் (பணம்) வீணடிக்கப் படுவதில்லை. ஆனால் தற்பொழுது மாறி வரும் கலாச்சாரத்தால், பணத்தின் மதிப்பு மாறுகிறது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தல், அதிக சம்பளம் தரும் வேலைகளால் பணத்தின் மதிப்பு குறைகிறது, வீணடிப்புகள் அதிகரிக்கிறது. இது எல்லாமே பணவீக்கத்தின் அடிப்படைக் காரணம். இதைச் தனி மனித ஒழுக்கம் மூலம் சரி செய்யலாம்.

இரண்டாவது அரசாங்கம் செயல்பாடு. இது பலபேரும் அலசி ஆராயும், மேலும் அடிக்கடி விமர்சனத்திற்குள்ளாக்கப் படும் விசயமும் ஆகும். ஊழல் மூலம் கருப்புப் பணம், ஓட்டு வங்கியைக் காப்பாற்றுவதற்காக இலவச கலர் டி.வி, சமையல் எரிவாயு போன்ற (அத்தியாவசியமில்லாத) விசயங்கள் மீண்டும் வரிப்பணமென்றும், பொருட்களின் விலையேற்றம் மூலமாகவும் மக்களின் கழுத்தையே மீண்டும் நெரிக்கிறது.

5 comments:

said...

பணவீக்கம்

இதன் முலம பல கருத்துகள் நான் தெரிந்து கொண்டேன்.நன்றி அண்ணன்.பணவீக்கத்தை தெளிவாக விளக்கியுள்ளிர்கள்.

said...

வெல் செட் பாஸ்க்கி ... தெளிவான விளக்கம் ... குட் ... கீப் ட் அப் ...

எனது கருத்து: ஆடம்பர வாழ்க்கையும் பண வீக்கம் ஏற்பட ஒரு முக்கிய காரணம் ... இது இப்போது நகர புறங்களில் அதிகரித்து வருகிறது ... இப்போது எனக்கு நேரம் இன்மையால் ... இதை பற்றி பின்னர் கூருகிறேன் ... நன்றி ... காந்தி ராஜ்.

said...



Thanks Dear Dude.


said...

ரொம்ப தாமதமா உங்க பதிவைப் பார்க்கிறேன்.

அருமையா எழுதியிருக்கீங்க பணம் பணமதிப்பு மற்றும் பணவீக்கத்தைப் பற்றி. தொடர்ந்து எழுதுங்க!

said...

மிக்க நன்றி தமிழ்நெஞ்சம் மற்றும் நம்பி அவர்களே.